கிருஷ்ணகிரி: 30 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பட்டியலின மக்கள் வீட்டுமனைப்பட்டா வழங்கிடக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு  அன்னை இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அனைத்து வீடுகளும் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், அரசு புறம் போக்கு நிலத்தில்  வீட்டுமனைப் பட்டா வழங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவகத்தில் மனு வழங்கினா். 

Night
Day