கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் - கோயம்பேடு ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டிற்கு மாற்றாக கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்தது. இதனால், ஆம்னி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுவதால், ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைத்த நிலையில், தற்போது 500 ரூபாய்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். 

varient
Night
Day