கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அடுத்தாண்டு வந்துவிடும் என அமைச்சர் சேகர்பாபு தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் ரயில் நிலையம் அமைக்கும் பணி இதுவரையில் தொடங்காமல் உள்ள நிலையில் ஓராண்டுக்குள் பணிகள் முடிந்துவிடும் என அமைச்சர் சேகர்பாபு கூறியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் ரயில் நிலையம் அமைப்பதற்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இந்த ஆண்டுக்குள் பணிகள் நிறைவடைய உள்ளதாக தெரிவித்தார். ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படாத நிலையில் விரைவில் ரயில் நிலையம் வரும் என அமைச்சர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Night
Day