கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வரும் நடைமேடை குறித்து தவறான தகவலை தெரிவித்த அதிகாரிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வரும் நடைமேடை குறித்து பயணிகள் குறை தீர்ப்பு அதிகாரிகள் தவறான தகவலை அளித்ததால் பயணிகள் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் , பயன்பாட்டிற்கு வந்த நாள் முதலே அடுக்கடுக்கான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் வார இறுதி நாளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடலூர், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

Night
Day