கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 2 மகன்களுடன் பெண் தர்ணா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தனது 2 மகன்களுடன் பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சூலூர் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி மகளிர் உரிமை திட்டத்திற்கு மனு அனுப்பிய நிலையில், அவரது கைப்பேசிக்கு மாதாமாதம் வங்கி கணக்கில் தொகை செலுத்தப்பட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது. ஆனால் தொகை வேறு ஒருவடையை வங்கி கணக்கில் சென்று சேர்வதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கலைச்செல்வி குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை வந்த அவர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமர்ந்து தனக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தர்ணாவில் ஈடுபட்டார்.

Night
Day