கீழப்புதூரில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கீழப்புதூர் பகுதியில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

பூக்கள் தூவியும், தீப்பந்த சிலம்பாட்டம் ஆடியும் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கீழப்புதூர் பகுதியில் கிரேன் மூலமாக பிரம்மாண்ட மாலை, புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அணிவிக்கப்பட்டது. 

கீழப்புதூர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் பாசறையில் பயின்ற தான், தமிழக மக்களின் நலனுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட போவதாக தெரிவித்தார். 

கீழப்புதூர் வடகாசி அம்மன் கோவில் சார்பில் புரட்சித்தாய் சின்னம்மா பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட மலர் கிரீடத்தை  புரட்சித்தாய் சின்னம்மா வணங்கி பெற்றுக்கொண்டார். 




Night
Day