குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம், தேவாலா பகுதியில் உலா வந்த காட்டு யானையை வனத்துறையினர் அடர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கூடலூர் அடுத்த தேவாலா பகுதியில் ஒற்றைக் காட்டு யானை உலா வந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு கூச்சலிட்டு காட்டு யானையை அடர்வனப் பகுதிக்குள் விரட்டினர். மேலும், இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். 

Night
Day