குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசும் கோயம்பேடு பேருந்து முனையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேடு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதால் கோயம்பேடு பேருந்து முனையம் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது புதுச்சேரி, வேலூர் மற்றும் திருப்பத்தூருக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்ற. இதனால் பேருந்து நிலையம் பராமரிப்பின்றி வெறிச்சோடி காணப்படுவதுடன், அதிக அளவில் குப்பைகள் குவிந்துள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனிடையே இங்கு கடைகள் வைத்துள்ள நபர்கள், தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறைந்த வாடகையில் கடைகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day