கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, கும்பகோணத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு, தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். 

varient
Night
Day