தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
கும்பகோணம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏராகாரம் ஊராட்சி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதன்மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நீர்த்தேக்கத்தொட்டி சரிவர பராமரிக்கப்படாததால், தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதுடன், ஒரு சில பகுதிகளில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. நீர்த்தேக்கதொட்டி எந்நேரமும் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அதிகாரிகள் அமைத்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...