குரங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் நீதிபதி கருத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாழை மற்றும் கொய்யா செடிகளை குரங்குகள் சேதப்படுத்தியதற்கு இழப்பீடு கோரிய வழக்கில், வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறை இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 
திருச்சி மாவட்டம் முசிறி கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை, கொய்யா செடிகளை குரங்குகள் சேதப்படுத்தியதால் இழப்பீடு கோரி தாயுமன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குரங்குகள் ஏற்படுத்திய சேதத்தை நீதிமன்றத்தால் கண்டறிய முடியாது என்றும் இருப்பினும் தோட்டக்கலைத்துறை, மற்றும் வனத்துறையினர் சேதத்தை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Night
Day