குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போல் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகளை இணையத்தில் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளை கடத்துவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட சென்னை சைபர் க்ரைம் போலீசார், இந்த வீடியோ போலியானது என்றும், எகிப்தில் உள்ள ஒருசில இளைஞர்களால் காட்சிப்படுத்தப்பட வீடியோ என்றும் தெரிவித்தனர். இதுபோன்று போலியான வீடியோக்களை இணையத்தில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

Night
Day