குவைத் தீ விபத்து - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத்தில் மங்காஃப் பகுதியில் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
 
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும்,  உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு வர தேவையான அனைத்து ஏற்பாடுகளை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day