கேந்திரிய வித்யாலய பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கேந்திரா வித்யாலயா பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை செய்ததாக ஓவிய ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோணத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திர வித்யாலயா பள்ளியில்  படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் ராமச்சந்திர சோனி  என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் ஆசிரியர் ராமச்சந்திரசோனியை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Night
Day