கேப்டன் விஜயகாந்த் ஒரு தலைசிறந்த சமூக சேவகர் - இணையமைச்சர் எல்.முருகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சினிமா மட்டுமின்றி தேசத்திற்கு அர்ப்பணித்த தலைவராக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்திற்கு மத்திய அரசு பத்ம பூஷன் வழங்கி கௌரவித்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கேப்டன் விஜயகாந்த் ஒரு தலைசிறந்த சமூக சேவகர் என்றும், ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர் என்றும் புகழாரம் சூட்டினார். 

Night
Day