கேரட், பூண்டு விலை கிடுகிடுவென உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட், பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், தற்போது 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காய்கறிகளின் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day