கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல், நிகோபார் தீவுகளில் கடந்த 19-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவில் கணிக்கப்பட்ட நாட்களுக்கு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த பருவமழை படிப்படியாக தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் தொடங்கும் எனவும், ஜூலை மாதத்தின் மத்தியில் நாடு முழுவதும் பரவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்தாண்டு கேரளாவில் தாமதமாக தொடங்கிய நிலையில் இந்தாண்டு 2 நாட்கள் முன்கூட்டியே பருவமழை தொங்கியுள்ளது. கேரளாவில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட 34 சதவீதம் குறைவாக பெய்தது. இந்தாண்டு, தென்மேற்கு பருவ மழை சராசரியைவிட அதிகமாக பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் அடுத்த 5 நாட்கள் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Night
Day