கொடைக்கானலில் கண் துடைப்புக்காக பறவைகள் கணக்கெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கண் துடைப்புக்காக பறவைகள் கணக்கெடுப்பு நடத்துப்படுவதாக பறவை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொடைக்கானலில் கால நிலைக்கு ஏற்ப பல்வேறு பறவையினங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பறவைகள் கணக்கெடுப்பு முறையாக நடத்தப்படுவதில்லை என்றும், கடந்தாண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும் பறவைகள் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தாண்டும் பறவைகள் கணக்கெடுப்பு கண் துடைப்புக்காக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டிய பறவை ஆர்வலர்கள், பறவைகள் மற்றும் வனவிலங்கு கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Night
Day