கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் நாற்று நடவுப்பணி தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பல வண்ணங்களினால் ஆன 4 ஆயிரத்து 500 டேலியா மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது. இந்த செடிகள் வரும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day