கொடைக்கானல்: பூக்களே இல்லாத பிரையண்ட் பூங்காவுக்கு நுழைவு கட்டணமா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூக்களே இல்லாத நிலையில் அதிக நுழைவுக் கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி ரசிக்கக்கூடிய இடங்களில் பிரையண்ட் பூங்காவும் ஒன்று. இந்த பூங்காவில் லட்சக்கணக்கான மலர் செடிகள், ரோஜாக்கள் இருக்கும். இந்நிலையில் தற்போது பெயரளவிற்கு கூட பூக்களே இல்லை. இருந்தபோதும் இந்த பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூக்களே இல்லாத பூங்காவிற்கு கட்டணம் கேட்பது நியாயமா என சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Night
Day