கொட்டும் மழையில் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த மருத்துவக்குழு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் மத்தம்பாளையம் அருகே கொட்டும் மழையில் ஆம்புலன்ஸில் வைத்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. மத்தம்பாளையம் அம்பேத்கர் நகரில் சௌமியா என்ற பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டதாக ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்பகுதிக்கு சென்ற மருத்துவ குழுவினர் நிறைமாத கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை நோக்கி சென்றனர். செல்லும் வழியிலேயே வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Night
Day