கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களும் சென்னை கொண்டுவரப்பட்டது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றபோது கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களும் சென்னை கொண்டுவரப்பட்ட நிலையில், இறுதி அஞ்சலிக்குப்பின் 5 பேரின் உடல்களும் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

சென்னை எழும்பூர் அருகே உள்ள ஹவுசிங் போர்ட் பகுதியைச் சேர்ந்த 18 பேர், வேன் ஒன்றில், கடந்த 6 ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் அமைந்துள்ள அன்னை மரியா தேவாலயத்திற்கு சென்றுவிட்டு, கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். வெகுநேரமாகியும் ஐவரும் கரைக்கு வராததால், அவர்களுடன் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, திருக்காட்டுப்பள்ளி காவல் துறைக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, 5 பேரின் உடல்களையும் மீட்டனர்.

பின்னர், 5 பேரின் உடல்களும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, சென்னை நேரு பார்க் ஹவுசிங் போர்டில் அமைந்துள்ள அவர்களது இல்லத்திற்கு நள்ளிரவு 3 மணி அளவில் கொண்டுவரப்பட்டது.தொடர்ந்து, இறுதிச்சடங்கு செய்யப்பட்டு 5 பேரின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

Night
Day