கோட்டாட்சியர் கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அருகே வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா தனது காரில் பணி நிமித்தமாக திருமயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி - காரைக்குடி லேனா விளக்கு என்ற இடத்தில், கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவின் கார், எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஐஸ்வர்யா மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து நமனசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day