கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லையென மக்கள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீபாவளியை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தீபாவளியை முன்னிட்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வரும் 28-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஆனால், கடந்த ஒரு வருடமாக பேருந்து நிலையம் பராமரிக்கப்படாததால் மேற்கூரைகள் உடைந்தும், நாற்காலிகள் சேதமடைந்தும், மின்விசிறிகள் இயங்காமலும் உள்ளது. மேலும் குடிநீர், கழிப்பிட வசதிகள் இன்றியும், பேருந்து நிலையம் முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சிஎம்டிஏ நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day