எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் 29-வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுக்கு 6 சதவீதம் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் செய்யும் விசைத்தறியாளர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி 5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனிடையே நேற்று கடைகளை அடைத்து வணிகர்கள், தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 29-வது நாள் வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், 900 கோடி அளவிற்கு காடா துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.