கோவை மாநகரில் 1,000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரசித்தி பெற்ற கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஆயிரத்து நூறு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரில், குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கடந்த 4 மாதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பீளமேடு பகுதிக்கு மேலும் ஒரு காவல்நிலையம் விரைவில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கோனியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெறும் நிலையில், சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளின் நடமாடத்தை கண்காணிப்பதோடு 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Night
Day