கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கத்தியுடன் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கத்தியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாதம்பட்டியை சேர்ந்த மரகதவல்லி என்ற பெண் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக அந்த பெண்ணை மடக்கி அவரிடம் இருந்து கத்தியை பிடுங்கினர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நிலத்தகராறு தொடர்பாக தன்னை 3 பெண்கள் தாக்கியாகவும், இது குறித்து புகார் அளித்தும் பேரூர் காவல் நிலைய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை பந்தய சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day