கோவை: அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த பாம்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த 4 அடி நீளமுள்ள மோதிர வளையன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் புதிய கட்டடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் இடையில் மோதிர வளையன் பாம்பு இருப்பதை ஊழியர்கள் கண்டனர். உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனால் மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அச்சமடைந்தனர். 

Night
Day