கோவை: ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவசமாக மனுக்களை எழுதி கொடுக்க ஏற்பாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இலவசமாக மனு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இந்நாளில் மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான மக்கள், எவ்வாறு மனு எழுதுவது என தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். இதனிடையே ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே மனுக்கள் எழுத அதிக பணம் கேட்பதாக கடந்த சில நாட்களாக புகார்கள் வந்தன. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் தற்போது ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் இலவசமாக பொதுமக்களுக்கு மனுக்களை எழுதிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் பயனடைந்துள்ளனர்.

Night
Day