கோவை: கணவன் மனைவி தீக்குளிக்க முயற்சி - காவல்துறையினா் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் டீசலை மேலே ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். அப்போது, கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் கணக்காளராக முருகேசன் பணிபுரிந்து வந்ததாகவும், தற்போது அந்த இடத்தில் மற்றொருவரை செயல் அலுவலர் கனகராஜ் பணி அமர்த்தியுள்ளதால் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவா் வேதனையுடன் தெரிவித்தார்.

Night
Day