கோவை: கவியருவியில் நீர்வரத்து குறைவு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் உள்ள ஆழியார் கவியருவியில் நீர்வரத்து குறைவு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இதையடுத்து ஆழியார் கவியருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Night
Day