கோவை: குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் சார்-ஆட்சியரிடம் மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பக்கோதிபாளையத்தில் முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். பக்கோதிபாளையத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வராததால், அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து, பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காலி குடங்களுடன் அவர்கள் சார் - ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

varient
Night
Day