கோவை: கூட்டுக்குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு - சாக்கடையில் வீணாக கலக்கும் குடிநீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே கூட்டு குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வீணாக சாக்கடையில் கலப்பது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆனைமலை அடுத்த ஆழியார் அணையில் இருந்து கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேடசந்தூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாக்கடையில் கலக்கிறது. இதனிடையே அப்பகுதி மக்கள் உடைப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீருக்காக பிடித்து செல்கின்றனர். மேலும் குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் விரையமாவதை தடுக்க கேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day