கோவை: தேர்தல் காரணமாக நாளை டாப்ஸ்லிப்-க்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கோவை மாவட்டம் ஆழியார் அணையில் நாளை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள பணியாளர்களும் வாக்குகளை செலுத்த செல்ல வேண்டும் என்பதால், நாளை சுற்றுலா பயணிகளின் வருகைக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதேபோல் ஆழியார் அணைக்கும், சிறுவர் பூங்காவிற்கும் நாளை விடுமுறை விடப்படுவதாக பொதுப்பணி நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day