கோவை: மக்களின் அன்றாட வாழ்க்கையை தத்ரூபமாக வரைந்த வெளிநாட்டு ஓவியர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் உக்கடம் அருகே உள்ள கட்டடங்களில் வெளிநாட்டு ஓவியர்கள் கண்கவர் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர். சிங்கப்பூர், ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ஓவியர்கள், ஸ்ட்ரீட் ஆர்ட் அமைப்பு மூலம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி ஓவியங்கள் வரைந்து வருகின்றனர். அதன் பகுதியாக புல்லுக்காடு மைதானத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு வந்த ஓவியர்கள், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை ஓவியமாக வரைந்துள்ளனர். இது கோவை மக்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Night
Day