கோவை: ரஷ்ய கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்த மாணவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற ரஷ்ய கலைஞர்களின் இடைவிடாத நடன நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கண்டு ரசித்தனர். தமிழிசை சங்கம், NIA கல்லூரி நிறுவனங்கள் இணைந்து இந்திய ரஷ்யா நாடுகளுக்கு இடையே உள்ள கலாச்சாரத்தை போற்றும் வகையில் நடன நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சி பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 19 ரஷ்ய நடன கலைஞர்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது நடனமாடி அசத்தினர். இதனை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். 

Night
Day