கோவை: வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை - மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அருகே வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட கோவனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைகின்றன. இந்நிலையில், வனத்தையொட்டி கிராமத்திற்குள் திடீரென நுழைந்த காட்டு யானைகள், அங்கிருந்த வீட்டின் மேற்கூரைகளை உடைத்து உள்ளே இருந்த அரிசியை சாப்பிட முயன்றன. அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி யானைகளை விரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். 

Night
Day