கோவை: வெள்ளிங்கிரி மலையில் ஏறிய இளைஞர் மூச்சுத் திணறி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலையில் ஏறிச்சென்ற இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். பூண்டி அருகே வெள்ளிங்கிரி மலையில் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் மலைப்பாதையில் சென்று வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற 23 வயது இளைஞர், வேலுரில் இருந்து 10 நண்பர்களுடன் கோவை வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார். இன்று அதிகாலை வெள்ளியங்கிரி 6 ஆவது மலையில் சென்ற போது ஏற்பட்ட கடும் பனியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி, தமிழ்செல்வன் உயிரிழந்தார். 

Night
Day