கோவை: வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை காட்டுயானையை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பக்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று திடீரென பக்தர்களை விரட்டியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

Night
Day