சங்கரன்கோவிலில் ரயில்வே கேட் பரமாரிப்பு பணி - குறுகிய பாதையில் திருப்பிவிடப்பட்ட வாகனங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக குறுகிய மாற்றுபாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சங்கரன்கோவில் - புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது. இதனால் புளியங்குடி, தென்காசி, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மாற்றுப்பாதை மிக குறுகலாக இருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஊர்ந்தபடி சென்றன. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 

Night
Day