சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப். 20ஆம் தேதி வரை நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார். இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 21வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Night
Day