சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது, நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் இருந்து 17வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day