சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 2-வது முறையாக சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 2-வது முறையாக ஜாமின் மனு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதாக தெரிவிப்பதால் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

Night
Day