சண்முகநல்லூரில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சண்முக நல்லூர் விலக்கில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கழக நிர்வாகிகள் கார்த்திக், சௌந்தர் பாண்டியன் ஏற்பாட்டில் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. 


அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவி அம்மா ஆட்சிகாலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம், இன்றைக்கு திமுகவினரின் விளம்பர ஆட்சியில் சீரழிந்துவிட்டதாக தெரிவித்தார். வரும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதற்கெல்லாம் நல்லதீர்வு கிடைத்துவிடும் என்றும், புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி நிச்சயம் அமையும் என்றும் சின்னம்மா உறுதிபட தெரிவித்தார்.  

Night
Day