சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பாக வரும் மார்ச் 4-ம் தேதி ஆஜராக அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பாக வரும் மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் எனப் பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்தே உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Night
Day