சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : சார்பு ஆய்வாளரின் உடல்நலன் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணையை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. சார்பு ஆய்வாளர் ரகுகணேஷின் ஜாமீன் மனு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, உயிரிழந்த தந்தை - மகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட  இடையீட்டு மனுவை ஏற்பதாகக் கூறி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார். மேலும் ரகு கணேசனின் உடல்நலன் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Night
Day