சாம்சங் ஆலை தொழிலாளர்கள் 19-வது நாளாக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாம்சங் நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து 19-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ், 8 மணி நேரம் பணி உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக இதுவரை ஐந்து முறை பேச்சுவார்த்தை நடந்தும், அவை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இதில் தலையிட வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய, மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Night
Day