சாம்சங் தொழிலாளர்களை அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா - சீமான் காட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 உரிமைக்காக அறவிழியில் போராடிய சாம்சங் ஆலை தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள விளம்பர திமுக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என  கேள்வியெழுப்பியுள்ளார். சாம்சங் பெரு நிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து தேடி தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் திமுக அரசின் கொடுங்கோன்மைச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் சீமான் தெரிவித்துள்ளார். 

Night
Day