சாரட் வண்டியில் புரட்சித்தாய் சின்னம்மா பேரணி - தொண்டர்கள் வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பாளையங்கோட்டை ஒன்றியம் வடக்கு விஜயநாராயணம் பகுதிக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தபோது, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

வடக்கு விஜயநாராயணம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் இருபுறங்களிலும், கிராமமக்கள் தங்கள் வீடுகளின் முன்பாக குடும்பம் குடும்பமாக நின்று, புரட்சித்தாய் சின்னம்மாவை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றனர். கிராமமக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்கும் வகையில் ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் வாழ்க என கோஷமிட்டபடி அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். 

வடக்கு விஜயநாராயணம் அழகிய ராஜகோபால சுவாமி திருக்கோவிலுக்கு செல்லும் வழியில் புரட்சித்தாய் சின்னம்மா, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு சாக்லேட்டுகள் வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். 

புரட்சித்தாய் சின்னம்மா வருகையின்போது, இரவு நேரத்திலும் வீடுகளின் முன்பாக பெண்கள் கோலமிட்டு, திருவிழாவை போல சின்னம்மாவின் வருகையை கொண்டாடி மகிழ்ந்தனர். 

புரட்சித்தாய் சின்னம்மாவை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அமரவைத்து ஊர்மக்கள், பேரணியாக அழைத்துச் சென்றனர். 

மேளதாளங்கள் முழங்க சாரட் வண்டி முன்னே செல்ல, உற்சாக வரவேற்பு அளித்தபடி புரட்சித்தாய் சின்னம்மாவை வடக்கு விஜயநாரயணம் பொதுமக்கள் அழைத்துச்சென்றனர். 

வடக்கு விஜயநாராயணம் அழகிய மன்னர் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு வரும் வழிநெடுகிலும் சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்த புரட்சித்தாய் சின்னம்மாவிடம் குங்குமம், சந்தனம், விபூதியை பெற்று பொதுமக்கள் வாழ்த்துக்களை பெற்றனர். 

மேளதாளங்கள் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க சாரட் வண்டியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, இரவையும் பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் திரண்டுநின்று பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

புரட்சித்தாய் சின்னம்மாவின் வருகையால் வடக்கு விஜயநாராயணம் திருவிழா கோலத்துடன் காட்சியளித்தது. 






Night
Day