சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் திரண்டு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்டிராங், நேற்று முன்தினம் இரவு 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பின்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஆம்ஸ்டிராங்கின் உடல், நேற்று இரவு அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆம்ஸ்டிராங் ஆதரவாளர்கள் புடைசூழ ஆம்புலன்சில் அவரது உடல் அயனாவரத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் தொண்டர்கள் ஜெய்பீம் என முழக்கமிட்டவாரும், வீரவணக்கம் செலுத்தியவாறும் சென்றனர். சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Night
Day